Sunday, April 12, 2009

வாழ்வை முழுமையாக்கும் தருணங்கள்

வாழ்வை முழுமையாக்கும் தருணங்கள் எவை என்கிற கேள்வி சில நாட்களுக்கு முன் எழுந்தது.. அதற்கான விடையை தேடிய பொழுது..

ஒருமுறை விகடன் சந்திப்பில், வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் இப்படி குறிப்பிட்டார். "வாழ்கை என்பது வாழும் காலத்திலேயே திருத்தப்பட்டு மறைந்த பின்பு படிக்கப்பட வேண்டிய மாபெரும் கவிதை" என்று. அப்படியான வாழ்வை நாம் எப்படி செழுமை படுத்துகிறோம் என்கிற கேள்வி எழாமல் இல்லை. வாழ்வில் எல்லா தருணத்திலும் நம்மை திருத்திக்கொள்ள தருணங்கள் இருக்கின்றன. ஒருமுறை மட்டும் அமைவதில்லை. அது நம் இறுதி முடிவில்.

நம் வாழ்வில் பெற்றோரை சந்திப்பது, நண்பர்களை சந்திப்பது, உறவுகளை புதிப்பிப்பது, இறையை தேடிடும் நிமிடங்கள், அரிதான புத்தகங்கள், குழந்தைகளோடு உரையாடுதல் என இந்த விஷயங்கள் வாழ்வை முழுமை ஆக்குகின்றன. கோபம், வரைமுறை அற்ற தடித்த பேச்சுகள், உறவுகளை கீறி ரனப்படுத்துகின்றன. நாம் கோபமுடன் எதிராளி மீது வார்த்தை வீசும் தருணத்தில், திராவகம் வெளி வருகிறது என்பதை மறந்து விடுகிறோம். எத்தனையோ நட்புகள், ஒற்றை வார்த்தைகளில் முறிந்து காணாமல் போனதாய் இருக்கின்றன. "நாம் சொல்லாத வார்த்தைகளுக்கு நாம் அதிபதி. நாம் சொன்ன வார்த்தைகள் நமக்கு அதிபதி!" இது என்றும் பொது மொழி.

நிறைய தருணங்களில் மனதை மீண்டும் சேர்த்திட, குறுக்கே நிற்பவை முன்பு உதிர்த்த அக்னி வார்த்தைகளே. செய்த செயல்களை விட வார்த்தைகளே நெஞ்சில் என்றென்றும் நிழலாடி வேதனையை விதைத்து செல்கிறது. ஒரு திருமண நிகழ்வு, ஒரு பண்டிகை தினம், ஒற்றை நல விசாரிப்பு, இதழோரம் விரியும் இனிய புன்னகை இவை உறவுகளை அதிகம் வலுப்பட செய்கின்றன. விசு ஒருமுறை இப்படி குறிப்பிட்டார். "வாழ்வின் ஒவ்வொரு விஷயமும் கொஞ்ச நேர சந்தோசத்திற்காக இல்லாமல், நீண்ட நாளைய குதூகலத்திற்காக இருக்க வேண்டும்" என்று.

ஒவ்வொரு நாளையும், புதிதாக பார்போம். நேற்றைய நாள், நேற்றுடன் முடிந்தது. நேற்றைய வருத்தம், கோபம், இவை நேற்றுடன் இருக்கட்டும். அவை இன்றைய பொழுதின் இனிமையை கெடுக்க வேண்டாம். மனம் எப்பொழுதும், ஒரு வெள்ளை காகிதமாகவே இருக்கட்டும்.

"மனிதா..
வருகின்ற பூகம்பம்
வரட்டும் என்றாவது ..
போர்களை நிறுத்து
புன்னகை உடுத்து..
பூமியை நேசி
பூக்களை ரசி
மனிதரை மதி
மண்ணை துதி
இன்றாவது.. "
- வைரமுத்து
.

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்