Sunday, October 12, 2014

ராபின் ஷர்மா - who will cry when you die?


ராபின் ஷர்மா அவர்களின் "who will cry when you die?" புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவரின் முந்தய புத்தகங்களை போல், இதுவும் ஒரு வெற்றி புத்தகமே. கனடாவில் செட்டில் ஆகி விட்ட இந்தியர் இவர்.  நீங்கள் சுயமுன்னேற்ற  புத்தகம் வாசிக்க விருப்பம் உள்ளவரா? அப்படியாயின், இது உங்களுக்கே..

புத்தகத்தில் இருந்து.
1. வாழ்வை எப்படி அர்த்தத்துடன் வாழ்வது.
2. வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் பயன்படுத்தும் முறை
3. நேரத்தை செலவழிக்கும் விதம்
4. உங்களின் நன்றி உணர்வு
5. அதிகாலை எழுதல் அதன் உடனடி பயன்
6. தியானம் பழகு
7. வாழ்வின் மிக முக்கிய மூன்று நண்பர்களை தேடி பிடி
8. உங்களின் குறிக்கோள் அட்டை
9. எதை எல்லாம் படிக்கலாம் ?
10. குடும்பத்துக்கு செலவிடும் மணித்துளிகள்.
11. உங்களுக்கு அருகே யார் வசிக்கிறார்கள்..
12. ஒவ்வொரு காலையும் எப்படி துவங்குகிறீர்கள்?

வாழ்வை கொண்டாடும் விதம், தான் பெற்ற அனுபவம் என ஆசிரியர் ஒவ்வொன்றையும் விவரிக்கிறார். பக்கத்துக்கு பக்கம் மிக சிறிய எளிய, அர்த்தமுள்ள கட்டுரைகள். இது நிச்சயம், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.

தன் வாசிப்பு அனுபவத்தில், தன் பொக்கிஷமாய் நினைக்கும் புத்தகங்களை போகிற போக்கில் பட்டியல் இடுகிறார். அவை ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை.

அவரின் இணைய  தளம்: http://www.robinsharma.com/
ஷர்மாவின் வலைப்பூ : http://www.robinsharma.com/blog/

ஒரு இந்திய மஹாராஜா இருந்தார். அவர் ஒவ்வொரு நாளும்தன் இறுதி யாத்திரையை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இன்றோடுதன் வாழ்வு முடிந்தால் தான் விட்டு செல்லும் கடமைகள் என்னஎன அறியவும், வாழ்வு நிலையற்றது; தான் விரும்பிய செயல்களை செய்து முடிக்கவும் ஞாபகப்படுத்தவே அவர் அப்படி செய்தார். நேரத்தை சரி வர உபயோகிப்பது எப்படி என சொல்லி செல்கிறார். இந்த புத்தகத்தின் அடி நாதமும் அந்த கருத்தே உள்ளது.

ஒவ்வொரு நாளும் தான் பயணிக்கும் ரயிலில், தான் சந்திக்கும் ஒரு நபர் பற்றிய எண்ண ஓட்டம் : அவர் தினமும் ரயிலில் பயணிக்கும் நேரத்தில் சுற்றி இருப்பவர் யார் என பார்க்காமல், உடல் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்து விடுவார். நேரம் பயனுள்ளதாய் இருப்பது போலவே உடலும் வலு படும். நித்தமும் உடல் பயிற்சி செய்வது மிக மிக அவசியம் என்கிறார்.

தனிஅறை : தன் நேரம்: ஒவ்வொரு நாள் விடியலில் இந்த தனி இடத்தில்,தன் லட்சியங்களை நினைவு படுத்தவும், வேண்டிய புத்தகங்களை புரட்டவும், இந்த பயிற்சி பயன்படும். தனக்கான இடத்தையும் தேர்வு செய்து இவற்றை நடைமுறை படுத்த வேண்டும் என்கிறார்.
.
.


No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்