Sunday, October 19, 2014

கார்டூனிஸ்ட் மதி அவர்களின் கார்டூன் அணிவகுப்பு

கார்டூனிஸ்ட் மதி அவர்களின் கார்டூன் சில நய்யான்டியாய் அன்றைய நிகழ்வுகளை விமர்சிக்க தவறுவதில்லை... அவற்றில் நான் கண்ட சில..

1. நல்ல வேளை :: தப்பிச்சு வந்தோம் :



2.இப்படி எல்லாம் பண்ண கூடாது..

3.தீபாவளி வந்தாச்சே :: நாங்க ரொம்ப நல்லவங்க :


4. நெசமாலுமா?


5.  என்னமோ போங்க :

6. முன்னமே சொன்னமே !
7. இப்படி இருந்தா நாங்க நம்ப முடியாது :


8. ஜப்பானிலே அப்படி :

 
(நன்றி : தினமணி )

Sunday, October 12, 2014

ராபின் ஷர்மா - who will cry when you die?


ராபின் ஷர்மா அவர்களின் "who will cry when you die?" புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவரின் முந்தய புத்தகங்களை போல், இதுவும் ஒரு வெற்றி புத்தகமே. கனடாவில் செட்டில் ஆகி விட்ட இந்தியர் இவர்.  நீங்கள் சுயமுன்னேற்ற  புத்தகம் வாசிக்க விருப்பம் உள்ளவரா? அப்படியாயின், இது உங்களுக்கே..

புத்தகத்தில் இருந்து.
1. வாழ்வை எப்படி அர்த்தத்துடன் வாழ்வது.
2. வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் பயன்படுத்தும் முறை
3. நேரத்தை செலவழிக்கும் விதம்
4. உங்களின் நன்றி உணர்வு
5. அதிகாலை எழுதல் அதன் உடனடி பயன்
6. தியானம் பழகு
7. வாழ்வின் மிக முக்கிய மூன்று நண்பர்களை தேடி பிடி
8. உங்களின் குறிக்கோள் அட்டை
9. எதை எல்லாம் படிக்கலாம் ?
10. குடும்பத்துக்கு செலவிடும் மணித்துளிகள்.
11. உங்களுக்கு அருகே யார் வசிக்கிறார்கள்..
12. ஒவ்வொரு காலையும் எப்படி துவங்குகிறீர்கள்?

வாழ்வை கொண்டாடும் விதம், தான் பெற்ற அனுபவம் என ஆசிரியர் ஒவ்வொன்றையும் விவரிக்கிறார். பக்கத்துக்கு பக்கம் மிக சிறிய எளிய, அர்த்தமுள்ள கட்டுரைகள். இது நிச்சயம், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.

தன் வாசிப்பு அனுபவத்தில், தன் பொக்கிஷமாய் நினைக்கும் புத்தகங்களை போகிற போக்கில் பட்டியல் இடுகிறார். அவை ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை.

அவரின் இணைய  தளம்: http://www.robinsharma.com/
ஷர்மாவின் வலைப்பூ : http://www.robinsharma.com/blog/

ஒரு இந்திய மஹாராஜா இருந்தார். அவர் ஒவ்வொரு நாளும்தன் இறுதி யாத்திரையை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இன்றோடுதன் வாழ்வு முடிந்தால் தான் விட்டு செல்லும் கடமைகள் என்னஎன அறியவும், வாழ்வு நிலையற்றது; தான் விரும்பிய செயல்களை செய்து முடிக்கவும் ஞாபகப்படுத்தவே அவர் அப்படி செய்தார். நேரத்தை சரி வர உபயோகிப்பது எப்படி என சொல்லி செல்கிறார். இந்த புத்தகத்தின் அடி நாதமும் அந்த கருத்தே உள்ளது.

ஒவ்வொரு நாளும் தான் பயணிக்கும் ரயிலில், தான் சந்திக்கும் ஒரு நபர் பற்றிய எண்ண ஓட்டம் : அவர் தினமும் ரயிலில் பயணிக்கும் நேரத்தில் சுற்றி இருப்பவர் யார் என பார்க்காமல், உடல் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்து விடுவார். நேரம் பயனுள்ளதாய் இருப்பது போலவே உடலும் வலு படும். நித்தமும் உடல் பயிற்சி செய்வது மிக மிக அவசியம் என்கிறார்.

தனிஅறை : தன் நேரம்: ஒவ்வொரு நாள் விடியலில் இந்த தனி இடத்தில்,தன் லட்சியங்களை நினைவு படுத்தவும், வேண்டிய புத்தகங்களை புரட்டவும், இந்த பயிற்சி பயன்படும். தனக்கான இடத்தையும் தேர்வு செய்து இவற்றை நடைமுறை படுத்த வேண்டும் என்கிறார்.
.
.


Saturday, October 11, 2014

அருட்செல்வர் நா. மகாலிங்கம்( குறைவிலா நிறைவே)







இதோ சென்ற வாரத்துடன் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் பிரியா விடை கொடுத்து விட்டார்கள். சோமன்துறை சித்தூரிலே துவங்கிய பயணம் தொண்ணூற்று ஒரு ஆண்டுகளுக்கு பின் சென்னையிலே முடிந்துள்ளது. கொங்கு மண், தன்னுடைய மிக முக்கிய ஆசானை, இழந்து விட்டது.

தான் எடுத்துக்கொண்ட எதுவாயினும், அதை அதி கவனத்துடன் செயல்படுத்துவது மகாலிங்கம் அவர்களின் வழக்கம். அவர் எடுத்துக்கொண்ட கல்வி பணியாகட்டும், ஆன்மீக பணியாயினும், பதிப்பு துறை ஆனாலும் அதில்   தன் தனி முத்திரையை பதிக்க தவறியது இல்லை. அவரின் ஆசிரியராய் கொண்டு வெளி வந்த "ஓம் சக்தி" இதழ் அதற்கு உதாரணம். அதில் வரும் ஒவ்வொரு தலையங்கமும், மிக மிக ஆழமாய் அலசப்பட்டு  இருக்கும். மண்ணுக்கும், மக்களுக்கும் உகந்ததை அவர் சொல்ல தயங்கியது இல்லை.

தன் குடும்பத்தில், தனக்கு பின் உள்ள இரண்டு தலைமுறையை சரியாக வழி நடத்தியதும், தன் பணிகள் எதுவும் தொய்வுராமல் அவர்களின் ஆதரவை இறுதி நாள் வரை பெற்றது அவருக்கு இருந்த ஆளுமை தான். அவர் உயிர் நீத்த   சென்னை விழாவும்( காந்தி ஜெயந்தி ) அவர் ஆண்டாண்டாய் தொடர்பவை. சிலர் போதும் இந்த பொது வாழ்வு என ஒரு கட்டத்தில் முடிவுக்கு  வருவர். இவர் அதற்கு நேர் எதிராய் வாழ்ந்து மறைந்துள்ளார்.

வைரமுத்து அவர்கள் 2012 ஆம் ஆண்டில், கோவையில் நடந்த மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் திருக்கடவூர் நூல் வெளியீட்டு விழாவில் இப்படி குறிப்பிட்டார்.

"இந்த மண் அவருடைய பெருமைகளை எழுபதாண்டுகள் அனுபவித்து கொண்டுள்ளது. அந்த பெருமகன் நூறாண்டுகள் தாண்டியும் வாழவேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் இயற்கையை இறைஞ்சுகிறோம்.

காரணம், இந்த நாட்டில் பெரியவர்களுக்கான இடம் காலியாகிக்கொண்டே போகிறது. மூத்தவர்கள், சான்றோர்கள், ஒரு சபைக்கு அலங்காரமாய் இருப்பவர்கள் , மக்களால் மதிக்கப்படுகின்ற மாமனிதர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதை எண்ணி, நான் கவலைப்படுகின்றேன்.

எனவே எங்கள் அகராதியாக, எங்கள் முன்னனுபவமாக, எங்களின்  முன்னோட்டமாக அந்த பெருமகன் நூறாண்டு வாழ வேண்டும் என்று மன்றத்தில் நான் மகிழ்ச்சியோடு வேண்டுகின்றேன்.  "

வைரமுத்து தன் "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் " தொகுப்பில், திரு மகாலிங்கம் அவர்களை குறிப்பிட்டு "ஊருக்கு சர்க்கரை ஆலை வைத்து வழங்கும் அவர் உடம்பில் சர்க்கரை இல்லை " என மகிழ்வோடு குறிப்பிடுவார்.

மகாலிங்கம் அவர்கள் "தேசிய நதிகள் இணைப்புக்கு " பல முறை முனைந்தவர். அவரின் வாழ்நாளில் அது செயல் வடிவம் பெறாமலே போய்விட்டது. ஒரு முறை தன் வளர்ச்சிக்கான காரணத்தை சொல்லும் பொழுது சரியான இடங்களில் மிக சரியானவரை நியமிப்பதே சூட்சுமம் என்றார்.

பொள்ளாச்சியை சுற்றிய எல்லா ஊர்களிலும், அவரை பற்றி எண்ணங்களை நினைவு கூர்வார்கள். மகாலிங்கம் அவர்களின் இல்ல திருமணத்தை, காண சென்று வந்த கதையை நிறைய பேரிடம் கேட்டு உள்ளேன். தன் கல்வி நிறுவனத்தில் "அற்புதமான பேராசிரியர்களை " அழைத்து வந்தது அவருக்கு இருந்த மிக பெரிய ஆர்வம். கல்வியாளர்களை போற்றுவதும் அவரின் இயல்பு. அவரின் நிறுவனத்தில் நுழைபவர்கள், ஏதோ கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த பிரமை இருக்க கூடும்.  அப்படி தான் அவரின் நிறுவனங்கள் காட்சி தருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பொள்ளாச்சியில் நடக்கும் மாரியம்மன் பண்டிகையில், முதல் பூவேடு அவருடையது. இனி வரும் ஆண்டுகளில் அதை காண முடியாது என்பது துரத்ரிஷ்டமானதே.



பன்னிரு திருமுறைகளை, திருக்குறள் மொழிபெயர்ப்பை வெளிகொணர்வதிலும், அதை நிறைய பேருக்கு சென்று சேர்ப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.   அவரை பற்றி பதிப்பகத்தார் ஒவ்வொருவரும் ஒரு நெடிய கதை சொல்ல, பண்பை சொல்ல வாய்ப்பு அதிகம். வள்ளலாரின் கருத்துக்களை, எங்கும்  கொண்டு சேர்த்த பெருமை இவர்க்கு உண்டு.

அவரின் ஓம் சக்தி இதழின் அட்டை படங்களும், அதில் வந்த தேர்ந்த எழுத்து ஓவியங்களும் கண்ணில் மினுங்குகின்றன. தேர்ந்த எழுத்தை போற்றி .வரவேற்றவர் அவர்.

சென்ற வார கல்கி இதழ் அவரின் அவரின் புகைப்படத்தை முகப்பில் ம. செ. வின் ஓவியத்துடன் வெளியிட்டு பெருமை சேர்த்தது. கல்கி இதழ் வெளியிட்ட தலைப்பு போல் அவரின் வாழ்வு "குறைவிலா நிறைவே."



அதே இதழில், ஓம் சக்தி இதழின் பொறுப்பு ஆசிரியர் திரு சிதம்பரநாதன் அவரின் எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பாய் இருந்தது.


அவர் கலந்து கொண்ட விழாவின் இறுதி நிமிடங்களில் அவர்...


அவரின் ஓம் சக்தி இதழ் ..



அவரின் நீண்ட ஊக்கத்துக்கும், பணிக்கும் எங்களின்  வணக்கங்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்  படும்.

(நன்றி : கல்கி, தி  ஹிந்து )
.
.

Friday, February 14, 2014

ஒரு மறக்க முடியாத ஒளி கலைஞனின் நினைவுகள் - பாலு மகேந்திரா




சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குடும்பம் விகடன் மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தியது. அது பாலு மகேந்திரா அவர்களிடம் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்பதே. அதை அவர் அழகாக நிறைவேற்றவும் செய்தார். அவரின் தனித்துவம், மிக சிறப்பான ஒளி கலைஞன் என்பதில் இருந்து துவங்குகிறது.

சில நாட்களுக்கு முன் பாலு அவர்களின் பழைய பேட்டியை கண்டேன். அதில் அவரின் ஆளுமையும் தனித்துவத்தையும் கண்டேன். அவரின் ஒரு சில படங்களை மட்டும் கண்டிருக்கிறேன்.. அவரின் திரைப்படத்தில் விரியும் இயற்கையும், சிதறுகிற ஒளியும் தனித்துவமானவை.. படங்களை காட்சி படுத்துகிற வித்தை அற்புதமானது.. 

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன், மும்பை நகரில் என் மராட்டிய நண்பனுடன், தங்கி இருந்தேன். நான் 'மூன்றாம் பிறை' படத்தின் பாடலான, "கண்ணே கலை மானே " பாடலை ஹம் செய்ய, என் அறை நண்பன், அதை இந்தியில் முடித்து வைத்தான். அந்த தருணம், அவனும் நானும் ஒரே புள்ளியில் சந்தித்த மகிழ்ச்சி. அவனின் மூலம் கண்ணதாசனும், பாலு மகேந்திராவும், இசை ஞானியும் அடைந்த தொலைவை எண்ணி வியந்தேன்... அவன் சொல்லி தான், பாலு மகேந்திராவின் "சாத்மா" படத்தை அறிந்தேன்..

பாலு மகேந்திரா அவர்களை பற்றிய ஆக பெரிய பிம்பத்தை ஏற்படுத்தியவர்கள், இயக்குனர்கள் பாலா மற்றும் சுகா அவர்களே. இவன் தான்  பாலா தொடரில், அவர் துவங்கி வைக்க, சுகா தன பங்குக்கு, மூங்கில் மூச்சிலும், தாயார் சந்நிதி புத்தகத்திலும் விவரித்து இருந்தார்.. 

அவர் இயக்குனர்கள் மகேந்திரன், மணி ரத்னம் இவர்களுக்கு ஒளி பதிவாளராய் அமைந்தது ஆச்சர்யம்.. தன படங்களுக்கு இசை ஞானியின் இசையை பெரிய பலமாய் நம்பியவர். தன்னை என்றென்றும் ஞாபகம் வைக்க கடைசி கடைசியாய், தலைமுறைகள் படத்தில் நடித்து தந்துவிட்டு போயுள்ளார்.. அவரின் முள்ளும் மலரும் ஒளி அமைப்பு, மூன்றாம் பிறை காட்சிகள், ராமன் அப்துல்லா படத்தில் வரும் இடங்கள் கண்களுக்கு விருந்து படைப்பவை.. ஒரு படத்தை எந்த செலவும் இல்லாமல் எளிமையாக முடிக்க அவரால் முடிந்து உள்ளது..

அவரின் ரசனையில் கருப்பு கதா நாயகிகள், அழகு பெறுகிறார்கள்.. தன சொந்த வாழ்க்கையில் பிறர், மூக்கை நுழைப்பதை விரும்பாத மனிதராய், தன் சுய கௌரவத்தை விட்டு விலகாதவராய்   இருந்துள்ளார்..


பாலு மகேந்திரா அவர்களுக்கு  ஊட்டியின் ஒவ்வொரு இடமும் அத்துபடி என அறிந்தேன். ஒவ்வொரு புல்லும், அவரின் கேமரா பார்வையில், அழகுபடுவது ஆச்சர்யம்..அவரின், ஒவ்வொரு படமும் இன்னொரு முகம்.    ஒரு யதார்த்தமான கலைஞனாய் வாழ்ந்த மனிதரை தமிழ் சினிமா  இழந்து விட்டது.. அவர் விட்டு சென்ற அவரின் சீடர்கள், அவரின் இடத்தை நிரப்பட்டும்.. beggers are not choosers - இது சுகா அவர்கள், அவர்களின் நிலை பற்றி வருத்தப்பட்ட போது, பாலு மகேந்திரா சொன்னவை..

அவரின் அற்புதமான படைப்பு திறனுக்கு இனிய பூங்கொத்துகள்.. 

Tuesday, January 14, 2014

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினம் மற்றும் ரத யாத்திரை




சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்,  ராம கிருஷ்ண மிஷன் மற்றும் சார்பு நிறுவனங்களால், ரத யாத்திரை நிகழ்த்தப்பட்டது. இதன் பொருட்டு, ராம கிருஷ்ண விஜயம் இதழ் ஒரு தனி புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

ரதத்தின் பயணங்கள் இங்கே காணலாம்.
http://www.srkv.org/ratham/index.html

நான் சென்ற வாரம் ராம கிருஷ்ண வித்தியாலயத்தில் நடந்த குரு பூஜை விழாவில் கலந்து கொண்டேன். வழக்கமான உற்சாகத்துடன் குரு பூஜை விழா இனிதே நடந்தது . அங்கே ரதத்தினில் பங்கேற்றவை, காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. நான்கு புறங்களிலும் கண்ணை கவரும் கருத்துக்களோடு அவை பயணித்து இருக்கின்றன.



பாஸ்கர சேதுபதியின் ரத ஓட்டம்


சர்வ மத மகா சபை


அமெரிக்க பயணம்


தமிழகம் பற்றிய கருத்து..



சென்னை - பார்த்த சாரதி கோவில்..


பரிவ்ராஜஹ வாழ்வில் ஓர் நாள் ..


வாழ்வின் இலட்சியம்


பனி சிகரத்தில்


தேசிய தலைவர்கள்


மகாத்மாவின் வார்த்தைகளில்..


Friday, January 3, 2014

பிரபலங்களின் பார்வையில் உன்னத புத்தகங்கள்


பிரபலங்கள் சிலர் அவர்களின் விருப்ப தேடலாய்,  பட்டியலிட்ட புத்தகங்கள்  இங்கே. இவற்றில் பல விகடன்   மூலம் பகிரப்பட்டவை ..


அசோகமித்திரன் 
1. உ வே சா வின் - என் சரிதம்
2. நாமக்கல் கவிஞரின் - என் கதை 
3. கல்கி - தியாக பூமி 
4. புதுமைப்பித்தன் - சித்தி 
5. சரத் சாட்டர்ஜி - சந்திரநாத் 
6. அலெக்சாண்டர்  டூமாஸ் - தி கவுன்ட் ஆஃ ப்  மாண்டி கிறிஸ்டோ.(The count of Monte Cristo)
7. சார்லஸ் டிக்கன்ஸ் - எ டேல் ஆஃ ப் டூ சிட்டீஸ் - The tale of two cities
8. தாகூர் - கோரா


கவிஞர் வாலி 
1. கண்டேகர் - யயாதி
2.  ல ச. ரா - ஜனனி
3. கண்ணதாசன் -  அர்த்தம் உள்ள இந்து மதம்
4. பழனி பாரதி - காற்றின் கையெழுத்து
5. விந்தன் - பாலும் பாவையும்
6. கல்கி - கள்வனின் காதலி
7. ஜெயகாந்தன் - ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
8. கலைஞர் - நெஞ்சுக்கு நீதி
9. வ. ரா. - கோதை தீவு
10. புஷ்பா தங்கதுரை - திருவரங்கன் உலா

 எஸ்.ராம கிருஷ்ணன் 
1. தி . ஜானகிராமன் - மோகமுள்
2. ஜெயகாந்தன் -  ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
3. கி ராஜநாராயணன் - கோபல்ல கிராமம்
4. ப சிங்காரம் - புயலிலே ஒரு தோணி
5. ஜி நாகராஜன் - நாளை மற்றொரு நாளே
6. சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை
7. அசோகமித்திரன் - ஒற்றன்
8. கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம்
9. வண்ண நிலவன் - கடல் புரத்தில்
10. எஸ். சம்பத் - இடைவெளி

சுய முன்னேற்றம் குறித்த ஜான் சி மாக்ஸ்வெல் அங்கீகரித்தவை.

1. Today Matters – John C. Maxwell
2. Winning With People – John C. Maxwell
3. Half Time - Bob Buford
4. The On Purpose Person- Kevin McCarthy
5. Search for Significance - Robert McGee
6. 7 Habits of Highly Effective People - Stephen Covey
7. Purpose Driven Life – Rick Warren
8. Think & Grow Rich – Napolean Hill
9. As a Man Thinketh – James Allen
10. How to Win Friends & Influence People - Dale Carnegie
11. Total Life Management - Bob Shank
12. Talent Is Never Enough – John C. Maxwell

நா முத்துகுமார் அவர்களுக்கு அவரின் தந்தை பரிந்துரைத்தவை  இங்கே.

1. உ வே சா வின் - என் சரிதம்
2. பகத் சிங் - நான் ஏன் நாத்திகன் ஆனேன்
3. மகாத்மாவும்  சத்திய சோதனையும்
4. டால்ஸ்டாய் - போரும் அமைதியும்
5. தாஸ்தா எவ்ஸ்கி - குற்றமும் தண்டனையும்
6. உலகம் சுற்றும் தமிழன் - ஏ கே செட்டியார்
7. ஜான் ரீட் - உலகை குலுக்கிய பத்து நாட்கள்
8. சுத்தானந்த பாரதி மொழிபெயர்ப்பு - ஏழை படும் பாடு
9. ராபின்சன் குருசேவ் - தன்  வரலாறு
10. ஹெமிங்வே - கடலும் கிழவனும்


வைரமுத்து
1. good earth - நன்னிலம்
2. uncle tom's Cabin - டாம்  மாமா குடில்

தமிழருவி மணியன் 
மணியன் அவர்கள் சுட்டி செல்லும் சில புத்தகங்கள்.
1. குறிஞ்சி மலர், பொன் விலங்கு, ஆத்மாவின் ராகங்கள்  - ந. பார்த்தசாரதி
2. இளவரசன் - மாக்கியவல்லி 
3. uncle tom's Cabin - டாம்  மாமா குடில்
4. மூலதனம் - மார்க்க்ஸ்
5. அன்னா கரீனா , போரும் அமைதியும் - டால்ஸ்டாய்

சோமர்செட் மாம் :

1. War and peace
2. Pere goriot
3. Tom jones
4. Pride and prejudice
5. The red and the black
6. Wuthering heights
7. Madame Bovary
8. David Copperfield
9. The brother Karamazov
10. Moby Dick

எஸ் ரா அவர்களின், நூறு சிறந்த புத்தகங்கள் - பரிந்துரை .
http://www.sramakrishnan.com/?p=2087

எஸ். ரா அவர்களின், நூறு சிறுகதைகள் - பரிந்துரை

http://www.sramakrishnan.com/?p=550

குட்டி இளவரசன் The Little Prince by Antoine de Saint-Exupéry
ஒரு நூற்றாண்டின் தனிமை (One Hundred Years of Solitude by Gabriel García Márquez)

டாக்டர். பத்மா சுப்ரமணியம்
1) தெய்வத்தின் குரல் - காஞ்சி பெரியவர்
2) காஞ்சி பெரியவர் வாழ்க்கை வரலாறு - திவ்ய சரித்ரம்

C K ரங்கநாதன்
1) The magic of thinking big - David j schwartz

கு. ஞானசம்பந்தன்
1) ஆரோகான் ட்ரயல் (ஆரோகான்  பாதை )
2) விவசாயியின் மகள்
ஞானசம்பந்தன் தரும் தன்னம்பிக்கை வழிகாட்டி நூல் சில:
1) எண்ணமே வாழ்வு - அப்துல் ரஹீம்
2) வழிகாட்டும் ஒளிவிளக்கு  - அப்துல் ரஹீம்
3) எண்ணங்கள் தலைவனாகலாம் - எம் எஸ் உதயமூர்த்தி
4) ஓடும் நதியின் ஓசை - இறையன்பு
5) கலெக்டர் கனவுகள் - ரமேஷ் பிரபா
6) வெற்றி நிச்சயம் - சுகி சிவம்

மொழிபெயர்ப்பு நூல்கள்:
1) செம்மீன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
2) மய்யழிக் கரையினிலே - முகுந்தன்
3) சிக்கவீர ராஜேந்திர - மாஸ்தி வெங்கடேச ஐயர்
4) சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் கள்ளிக்காடு
5) ஆனந்த மடம் - பக்கிம் சந்திரர்
6) தேவதாஸ் - சரத் சந்திர சாட்டர்ஜி
7) கீதாஞ்சலி - தாகூர்
8) யயாதி - காண்டேகர்
9) மூன்று ஆண்டுகள் - செகாவ்
10) தாய் - மாக்சிம் கார்க்கி

அருண் ஜெயின் (போலாரிஸ் )Polaris
1)Fifth Dicipline - Peter Senge

எ பி ஜெ அப்துல் கலாம்
1) Light from Many Lamps, edited by Lillian Eichler Watson
2) Thirukkural
3) Man the Unknown -  Alexis Carrel

ராபின் ஷர்மா:
  1. The Autobiography of Benjamin Franklin.
  2. As You Think.
  3. Jonathan Livingston Seagull. By Richard Bach.
  4. Think and Grow Rich. By Napoleon Hill.
  5. The Meditations of Marcus Aurelius. By–well, Marcus Aurelius.
  6. Steve Jobs. By Walter Isaacson.
  7. Walden - Henry David Thoreau
  8. Long Walk To Freedom. By Nelson Mandela.
  9. Stop Acting Rich. By Thomas Stanley.
  10. The Magic of Thinking Big. By David Schwartz.
  11. Talent is Overrated. By Geoff Colvin.
  12. Spark. By John Ratey.
  1.  The Art of Happiness - Howard Cutler
  2. The Art of Worldy Wisdom - Baltasar Gracian
  3. The Brand You 50 - Tom Peters
  4. The Dark Side of The Light Chasers - Debbie Ford
  5. Dig Your Well Before You're Thirsty - Harvey Mackay
  6. The Four Agreements - Don Miguel Ruiz
  7. The Go-Getter - Peter B. Kyne
  8. Hope for the Flowers - Trina Paulus
  9. The Magic of Believing - Claude Bristol
  10. The Meditations of Marcus Aurelius Antoninus - Marcus Aurelius Antonius
  11. The Message of a Master - John McDonald
  12. The Power of Optimism - Alan Loy McGinnis
  13. Small Graces - Kent Nerburn
  14. Synchronicity: The Inner Path of Leadership - Joe Jaworsky
  15. Take Your Time - Eknath Easwaran
  16. Thinking Body, Dancing Mind - Jerry Lynch
  17. Tuesdays with Morrie - Mitch Albom
  18. University of Success - Og Mandino

பிரபஞ்சன்
1. புண் உமிழ் குருதி - அசோகமித்ரன்
2. காந்தியும், புலிக்கலைஞனும் - அசோகமித்திரன்

ரசனைக்கு  உரியவை:
1) The prayer of the frog : Anthony de mello
2) தி லாஸ்ட் லெக்ச்சர் - The last lecture By Randy pausch
3) 19 டி  எம் சரோனிலிருந்து - பவா செல்லத்துரை
4)The Secret -  Rhonda Bryne
5) Count your chickens before they hatch - Arindam chaudhuri
6) I Dare - Kiran bedi
7) Odyssey: pepsi to apple ... a journey of adventure, ideas, and the future

மொழிபெயர்ப்பு
1) மூன்றாம் பிறை - ஷைலஜா (வம்சி புக்ஸ் )

இல. செ. கந்தசாமி:
1. அகல் விளக்கு -   மு.வரதராசனார்
2. பொன் விலங்கு - ந. பார்த்தசாரதி

லேனா தமிழ்வாணன்
1.  துணிவே துணை - தமிழ்வாணன்

Arindam chaudhuri
1. How to win friends and influence people -  Dale Carnegie
.
(Book recommendations by famous personalities, Tamil , English )

Thursday, January 2, 2014

கடந்து போன ஆண்டு 2013


வருடத்தின் இறுதியில், கடந்து போன ஆண்டை, நாட்களை திரும்பி பார்க்க ஆசை கொண்டேன். அது தான் எல்லா பத்திரிக்கைகளும், வலை பதிவர்களும் ஒரு மாதமாய் பர பரவென எழுதி குவித்து விட்டனரே. இனியும் என்ன மிச்சம் இருக்கிறது எனும் உங்கள் கேள்வி புரிகிறது.

கடலை வியாபாரி ராமலிங்கத்தில் இருந்து பவரின் சிறை பிரவேசம் வரை, சுமார் மூஞ்சி குமார் முதல் தீயாய் வேலை செய்த குமார் வரை, தங்க மீன்கள் படைத்த ராம் முதல், மூடர் கூடம் சென்றாயன் வரை எத்தனை கலவையான முகங்கள்; புதிரான திருப்பங்களாய் எத்தனை சம்பவங்கள்; தமிழ் கூறும் நல்  உலகில் இருந்தும், வெளியில்  இருந்தும் கணக்கற்ற சம்பவங்கள்.

முதலில் சென்ற ஆண்டில் இனிய புதிதுகள் :

தமிழ் ஹிந்து :
பாரம்பரிய ஹிந்து ஆங்கில  நாளிதழ் குடும்பத்தில் இருந்து இத்தனை காலத்துக்கு பின் அட்டகாசமான ஒரு தமிழ் பதிப்பு , நம்மை தாளம் போட்டு ரசிக்க வைக்கிறது. இலக்கியத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவது அருமை.



இந்த வருட  ஹிந்துவின் தீபாவளி மலர் அருமையான வடிவமைப்பு. நிறைய இறை படங்களுடன், பல விஷயங்களை அலசி இருந்தது.



கல்கியில் மகாபாரத மாந்தர்கள் - காலம்தோறும் தர்மம் :
கல்கியில் ஒவ்வொரு வாரமும், ஒரு மகாபாரத மாந்தர்களை அறிமுகம் செய்விக்கிறார் எழுத்தாளர்  பிரபஞ்சன். வேதாவின் ஓவியங்கள், அதற்கு அழகு சேர்க்கின்றன.



கர்ணன், தர்மன், திருதராஷ்ட்ரன், காந்தாரி, சகுனி என ஒவ்வொரு பாத்திரத்தோடு மனித ஆன்மாவின் ஆழம் தொடுகிறார். ராஜாஜி, சித்பாவானந்தர், எஸ். ராமகிருஷ்ணன் , சோ என பலரின் பாரதத்தை படித்திருந்தாலும், இது நிச்சயம் வித்தியாசமான கோணம்.  இதன்  பொருட்டு இது வரை வந்த கதைகளோடு, வியாசரையும் தொட்டு செல்கிறார். மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கு அவர் தரும் விளக்கம் சிலர் அப்படி தான்.



மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன் :
 இது இயக்குனர் , துணை இயக்குனர் , எழுத்தில் தடம் பதிக்கும் காலம்  போலும்; விகடனில் வரும் தொடர்கள் யாவும், இவர்களிடம் இருந்து கனமுடன் வருகின்றன. பாஸ்கர் சக்தி, பாலா , சுகா, ராஜு முருகன் வரிசையில் செல்வராஜ் . ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சம்பவங்களோடு நெகிழ வைத்து தொடரை கொண்டு சென்றார்.

பிடித்த சிறுகதை :
இந்த வாரம் விகடனில் இடம்பெற்ற "அம்மா " சிறுகதை எனக்கு பிடித்து இருந்தது. வழக்கறிஞர் சுமதியின் கதை நெக்குருக செய்து விட்டது.  தாயையும்,மகளையும் இதை விட அழகாக பின்ன இயலுமா? எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு நெகிழ்ச்சி ...


மணியன் செல்வனின் ஓவியங்கள் கதைக்கு எப்போதும் போல ஆகப்பெரிய பலம். கண்களை நகர்த்தவே முடியவில்லை.

அம்மாவையும் மகளையும் அப்படியே போர்டரேட் செய்து தாராளமாக வீட்டின் வரவேற்பு அறையை அலங்கரிக்க செய்யலாம். அப்படி ஒரு தூரிகை ஹைக்கூ அது. தந்தை, மகள் உள்ள படமும் அப்படியே...




நா. முத்துக்குமாரின் வேடிக்கை பார்ப்பவன் :
தன் அப்பாவின் நினைவுகள், பால்யத்தில் படிக்க தந்த புத்தக பட்டியல், இலக்கிய  வட்டம், ல ச ராவை நேரில் கண்டது , அவரின் பள்ளிக்கூடம், தன் மகனின் பேச்சு என தண்ணீரின் அடி ஆழத்தில் தட்டுப்படும் பழுப்பு இல்லை போல அவரின் நினைவுகள் தொடரின் பத்திகள் எங்கும்.. அவரின் முந்தய தொடரான ... அணிலாடும் முன்றில் போல் இதுவும் நேர்த்தியாய் வலம் வரும்..

வண்ணதாசனின் கடிதம் :
வண்ணதாசனின் கடிதங்கள் சில அவரின் வலை பூவில் வாசிக்க  கிடைக்கின்றன . அவரின் சில இறகுகள்; சில பறவைகள் தொகுப்பில் இடம் பெற்றவை அவை; ஜெய மோகனின் வெண் கடல் புத்தகத்துக்கு வண்ணதாசன்  எழுதிய அனுபவ கடிதம் ஆத்மார்த்தமானது ..


நீங்காத கதா மாந்தர்கள் :
குமுதா ஹேப்பி அண்ணாச்சி என கூவும் சுமார் மூஞ்சி குமாரும், எதிலும் தன்னை வித்தியாசமாய் காட்டும்  சென்றாயனும், சென்ற ஆண்டில் வெள்ளி திரை கண்ட இனிய பாத்திர படைப்புகள்..


உதிர்ந்த முத்துக்கள் :


தம்பிகளுக்கு நீங்கா விடை கொடுத்த அண்ணன்
:
நாற்பது  ஆண்டுகளுக்கு மேல் இளைய தலை முறையை தன் எழுச்சி மிக்க எழுத்தால்; எண்ண ஓட்டத்தால் வழி நடத்திய டாக்டர் எம். எஸ். உதய மூர்த்தி (M S Udayamoorthi)அவர்களின் மறைவு நிகழ்ந்தது இந்த ஆண்டில் தான். இதோ அவரின் எண்ணங்கள் புத்தகம் 103 பதிப்புகளை தாண்டி வெற்றி நடை போடுகிறது. பாரதியை , கல்கியை தன் எழுத்தின் ஆதர்ஷமாய் கொண்டவர்.

வெற்றியை வெறுமனே போதிக்காமல் , தன் வாழ்வில் ஒவ்வொன்றையும் வெற்றிகரமாய் செதுக்கிய மேதை அவர். சமூக அக்கறை கொண்டு அவர் முன் எடுத்த நதி நீர் இணைப்பு , மது விலக்கு , அறிவு சார் தன்னம்பிக்கை பயிலரங்குகள் நிச்சயம் அவரை  நிஜ வாழ்விலும் சாம்பியன் என காட்டியது.

திரைஉலக ஜாம்பவான்கள் :
பி பி சீனிவாஸ்
"மயக்கமா கலக்கமா" என வாழ்வுக்கு தன் பாட்டுக்கு மெல்லிய குரலால்  வர்ணம் சேர்த்த பி பி சீனிவாஸ் மறைவு ஈடு இணை அற்ற  இழப்பு.

டி எம் எஸ்
முருகனை வேண்டி அழைக்கும் டி எம் எஸ் மரணம் அவரின் பெரும்பாலான ரசிகர்களுக்கு பெரிய துன்ப நிகழ்வு. பக்தி மணம் கமழ இனிக்க இனிக்க "அழகென்ற சொல்லுக்கு முருகா " என அழைத்தவர் .. கற்பனை என்றாலும் எனும் பாடல்கள் மறக்க முடியாதவை. மலந்தும் மலராது பாடலை என்றும் மறக்க முடியாது.

கவிஞர் வாலி
ஒவ்வொருவர் மறைவிலும் அவர்களை பற்றி நினைவுகளை பகிரும் வாலி மறைந்தது வருத்தம் நிறைந்தது. கண்ணதாசனுக்கு அர்த்தமுள்ள இந்து மதம் போல் வாலி, தன பிந்தைய வாழ்வில் தீட்டிய  ஓவியங்கள் என்றென்றும் நெஞ்சம் நிறைந்தவை. அவரின் அவதார புருஷன் தொடங்கி கிருஷ்ண விஜயம் வரை பாட்டால் ஆண்டது அதிகம்..

தூய உன் திருவடி துகளையே
அருளார்ந்த  அட்சதை என்று
அடியேன் சிரசுகளில் அணிந்தேன்
எல்லா காலத்தும்
எஞ்ஞான்றும் அந்தர்யமாய் இருக்கும்
அவன்..   :: கிருஷ்ண விஜயம்

புரையற்ற புத்தியை
பேண்
காஞ்சனம் கல் ஒன்றாகக் காண்
உண்டியை குறை ஓரளவே
உதரத்தை உணவால் நிறை
தியானம் தினம் பயில்
தவிர் சோம்பல் துயில்

வெகுளி
வீக்கம் விடு
வேட்கைக்கு விடைகொடு ....

ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று
உச்சரித்து பழகு
சாந்தம்தான் தெய்வ சித்தத்திற்கு அழகு
(பாண்டவர் பூமி)

நம்மாழ்வார் :
இயற்கை விவசாயத்தை பரப்பிய நம்மாழ்வாரின் மறைவு விவசாயிகளுக்கு நுகத்தடியை இழந்தது போன்றது..

புஷ்பா தங்கதுரை
திருவரங்கன் உலா போன தங்கதுரை அவர்களின் மறைவு இந்த ஆண்டு நடந்தது.

ஜான் கோடார்டு 
ஒரு மழை நாளில் பதினைந்து வயது பையன் ஜான் தன வாழ்வின் லட்சியங்களை ஒன்று இரண்டு என 127 ஐ பட்டியல் இடுகிறான். அவற்றில் 109 ஐ தன வாழ்வில் சாதித்தது அவர் வாழ்வை பிறரால் திரும்பி பார்க்க வைத்தது. அவரின் லட்சியம் ஒவ்வொன்றும் அசாத்தியம் ஆனது. நதிகளை அதன் முடி முதன் அடி வரை காண்பது, முக்கிய சிகரங்கள் பலவற்றை ஏறுவது என ஒவ்வொன்றும் மயிர் கூச்செறியும்  சாகசங்கள்.


மிக மிக பெரிய  லட்சியங்களை அடைந்த வாழ்வு அவருடையது. அது இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.

கருப்பு சூரியன் 
இனவெறிக்கு எதிராகவும் , மனித சமத்துவத்துக்கும் வாழ்வெங்கும் போராடிய மண்டேலா அவர்களின் மரணம், உலகம் முழுக்க அனைவரையும் கலங்க வைத்து விட்டது.
.
.