Sunday, June 21, 2009

தேடுவதும் தவிர்ப்பதும் - II


தேடுவதும் தவிர்ப்பதும் - இது சென்ற பதிவின் தொடர்ச்சி.. வாழ்க்கையில அதிகம் தேடுவதும், தவிர்க்க நினைப்பதுவுமான பட்டியல்.
நாம் சாரும் சமூகம்:
1) அடிக்கொரு முறை நமது குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். [ கை பேசி, கடிதம், மின்னஞ்சல் எதுவாயினும் இருக்கலாம். அவர்கள் எப்பொழுதும் நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் எனும் அறிவிப்பாய் இல்லாதிருக்கட்டும்.. ]

2) ஒவ்வொரு நாளும் சக மனிதருக்கும் நல்லவற்றை அளித்திட முன் வாருங்கள். ஒரு இனிய சொல், ஒரு வழிகாட்டுதல், ஒற்றை புன்னகை, எதுவாயினும்..

3) எல்லோரையும் மன்னிக்க பழகுவோம்.

4) ஒவ்வொரு நாளும் எழுபது வயதிற்கும் அதிகமான முதியவரோடும், ஆறு வயதிற்கும் குறைவான குழந்தைகளோடு செலவழிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களிடம் கற்க ஆயிரம் விஷயம் அகப்படும்.

5) தினமும் குறைந்தது மூன்று மனிதர்களின் முகத்தில் புன்னகையை கொணருங்கள்.

6) நம்மை பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என எண்ணும் எண்ணம் தேவையற்றது.

7) எப்பொழுதும் நண்பர் தொடர்பில் இருங்கள். அவர்களே உங்களுக்கு உதவும் கரங்கள்..

நமது வாழ்வு:
1) என்றென்றும் நல்லவற்றையும் சரியானதும் செய்திட முன் வாருங்கள். உங்களின் செயல்கள் மனதோடு ஒன்றி இருக்கட்டும்.

2) அர்த்தமற்ற, மகிழ்ச்சியை குறைக்கும் எந்த விஷயத்திலிருந்தும் உடனடியாக விலகுங்கள்.

3) இறைவனும் காலமும் எல்லா துயரையும் தீர்க்க வல்லவை. இறைவனின் பெரும் கருணையால் எல்லா ரணங்களும் குணப்படுத்த வல்லவை.

4) இதுவும் கடந்து போகும் எனும் நம்பிக்கை நமக்கு வேண்டும். நல்ல தருணம் ஆயினும், மோசமான தருணம் ஆயினும், அது மாறக்கூடியதே..

5) நல்ல நாளும் நல்ல நிமிடமும் இனி மேல் தான் வரப்போகிறது எனும் நம்பிக்கை கொள்ளுங்கள் .

6) ஒவ்வொரு நாளும் நீங்கள் துயில் எழும் பொழுதும் அந்த நாளை அளித்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஒவ்வொரு நாள் உறங்க செல்லும் பொழுதும் அந்த நாள் நல்லபடியாய் அமைத்து கொடுத்த இறைக்கு நன்றி சொல்லுங்கள்.

7)நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், விழித்து எழுங்கள்.. சோர்வை அனுமதியாதீர். அந்த நாள் உங்கள் நாளே.. வெற்றியும் உங்கள் பக்கமே..

[ இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது, அபூர்வ பட்டியல் என்னை நிறைய நெகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆட்படுத்தியது. அதை பகிர்ந்து கொள்கிறேன்... ]
.
.
.

1 comment:

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஒவ்வொரு நாளும் எழுபது வயதிற்கும் அதிகமான முதியவரோடும், ஆறு வயதிற்கும் குறைவான குழந்தைகளோடு செலவழிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களிடம் கற்க ஆயிரம் விஷயம் அகப்படும்.]]


அருமை..

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்