Sunday, June 21, 2009

தேடுவதும் தவிர்ப்பதும் - I


நம் ஒவ்வொருவர் நல்வாழ்வுக்கும் சில அடிப்படை விஷயங்கள் தேவைப்படுகின்றன. சில விஷயங்கள் ஒதுக்கப்பட வேண்டியவை. அப்படி தொகுக்கப்பட்ட விஷயங்கள் இங்கே. நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடி அடைவதும், அவற்றை இனங்கண்டு கொள்வதும் நமது வழக்கம். அதே போல், ஒரு நிகழ்வு நம்மை பாதிக்கும் என எண்ணினால் அதிலிருந்து ஒதுங்கி இருப்பதுவும் நம் கடமையே.. இந்த பட்டியல் அதிசயமாய் நம்மை உற்று நோக்க வைக்கிறது.. நாமும் நம்மை மறந்து சப்திப்போம்... அட, இத்தனை நாள் தெரியாமல் இருந்ததே என்று..

நம் ஆரோக்கியம்:
நாம் நம்மை ஆரோக்கியமாய் வைத்திட இந்த விஷயங்கள் அடிப்படை. நாமும் கடைபிடித்து தான் பார்க்கலாமே.
1) தினமும் அதிகமாக நீர் அருந்துங்கள்.

2) காலை உணவு ஒரு பேரரசனை போல் இருக்கட்டும். மதிய உணவு ஒரு இளவரசனை போல் இருக்கட்டும். இரவு உணவு ஒரு பிச்சை காரனை போல் குறைந்த அளவோடு இருக்கட்டும்.

3) மரம் மற்றும் நிலத்துக்கு வெளியே விளையும் காய்கறிகளை உணவில் நிறைய சேர்க்கலாம். நிலத்திற்கு அடியில் இருந்து பெறப்படும் காய்கறிகளை குறைவாக சேர்க்கவும்.

4) என்றென்றும் பெருகும் ஆற்றல், நல்ல உற்சாகம், நல்ல புரிதல் உங்களோடு உறவாடட்டும்.

5) உங்களின் ஒவ்வொரு நாளிலும் பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும், யோகா பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள். அதையும் உங்கள் வாழ்கை முறையாக, வாழ்வின் அங்கமாக கொணருங்கள். எல்லா நாளும் நல்ல நாளே.

6) நிறைய விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கானது மட்டுமல்ல. எல்லோர்க்குமானதே. விளையாட்டு உங்கள் ஒவ்வொரு உடல் அணுக்களையும் இளமைக்கு இட்டு செல்கிறது.

7) சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நீங்கள் படித்து முடிக்கும் புத்தகங்கள் அதிகமாக இருக்கட்டும்.

8) ஒவ்வொரு நாளும் அமைதியாக பத்து நிமிடங்கள் அமர்ந்து இருங்கள். மனம் முழுதும் பன்னீர் புஷ்பங்கள் உதிர்ந்தது போல் உணர்வீர்கள்.

9) ஒவ்வொரு நாளும் குறைந்தது ஏழு மணி நேரம் தூங்கி எழுங்கள். தூக்கத்தை போல் உடலையும் மனதையும் புத்துணர்ச்சிக்கு எடுத்து வரக்கூடிய பொருள் உலகில் வேறெதுவுமில்லை. நல்ல தூக்கம் ஆரோக்கியத்தின் அடையாளமும் கூட.

10) ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து முதல் முப்பது நிமிடம் நடக்க பழகுங்கள். நடக்கும் பொழுது உங்கள் முகமும் உடலும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் வெளிப்படுத்தட்டும்.

உங்களின் ஆளுமை :
உங்களின் ஆளுமை வளர்ச்சி எப்படி இருக்கிறது. உங்கள் வளர்ச்சி, உங்கள் நடவடிக்கை உங்களுக்கு திருப்தியா? இல்லை; இன்னும் மாற்றம் வேண்டும். என்னுள் வளர்ச்சியும் வேண்டும்.. என் பார்வையில் இன்னும் விசாலம் வேண்டும்... என் அறை கதவு இன்னும் காற்றை அனுமதிக்கட்டும்.

1) உங்களின் வாழ்வை மற்றவரோடு எக்காரணத்தை கொண்டும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஏனெனில் உங்களால் அவர்களின் பயணத்தை அறிந்திருக்க முடியாது. அவர்களின் பயணம் முற்றிலும் வேறு விதமாய் இருக்கலாம்.

2) உங்களுக்குள் எதிர்மறை சிந்தனைகள் தோன்றிட அனுமதிக்க வேண்டாம். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை பற்றி வருத்தமும் கொள்ள வேண்டாம். எப்பொழுதும் உங்கள் எண்ணம் நேர்மறை சிந்தையுடன், முன் உள்ள செயங்களில் நிலை கொள்ளட்டும்.

3) முதுகுக்கு பின்னால் அவதூறு பேசுவதை விட்டொழியுங்கள். அதில் உங்கள் அளவிடமுடியாத ஆற்றல் வீணாகிறது.

4) விழிப்பு நிலையில் நிறைய கனவு காணுங்கள்.

5) பேராசை , பொறாமை இவை நம்மை அழிக்க வல்லது. நமது தேவைகள் நமக்கு முன்னரே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டு விட்டன; நிறைவேறி வருகின்றன..

6) நேற்றைய தவறுகளையும் , பிரச்சனைகளையும் மறந்து விடுங்கள். உங்கள் துணைவரின் கடந்த கால தவறுகளை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டாம். கவனமாய் இருங்கள். ஏனெனில், அவை தற்போதைய மகிழ்ச்சியை துடைத்து எடுத்து செல்லும் வல்லமை உள்ளவை.

7) வாழ்வு மிக மிக சிறிய எல்லை கொண்டது. பிறரை வெறுத்து ஒதுக்காதீர்கள். சக மனிதர்களிடம் அன்பு பாராட்டிடுவோம்.

8) கடந்த காலம், உங்களின் நிகழ்கால வாழ்வின் அமைதியை குலைக்க அனுமதியாதீர்.

9) உங்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு. யாரும் அதை கூட்டவோ குறைக்கவோ முடியாது. உங்கள் மகிழ்ச்சிக்கு முழுவதும் நீங்களே பொறுப்பு.

10) வாழ்வு ஒரு பள்ளிக்கூடம். இங்கு நாமனைவரும் பாடம் பயில வந்துள்ளோம் என்பதை நினைவில் வைத்திருங்கள். பிரச்சனைகள் நாம் கற்கும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி. அல்ஜீப்ரா வகுப்பு போன்றே தோன்றுவதும் மறைவதுமாய் இருக்கும். ஆனால் நாம் கற்கும் ஒவ்வொரு பாடமும் வாழ்வு முழுதும் கூட வருபவை.

11) எல்லா விவாதத்திலும் நீங்களே வெல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாற்று கருத்து உள்ளவரையும் கண்ணியத்துடன் ஏற்று கொள்ளுங்கள்.

12) எதுவும் அளவோடு இருக்கட்டும். உங்களின் எல்லைகளை நீங்களே வரையருங்கள். எதையும் அதிதமாய் முயல வேண்டாம்.

13) எந்த விஷயத்தையும், பிரச்சனையும் அமைதியோடு அணுகுங்கள். அதிகமாய் பதறினாலும், கோபம் பெருகினாலும் பாதிப்படையும் முதல் நபர் நாம்தான்.

12) நிறைய புன்னகைக்கவும். முடிந்தால் அதிகமாய் வாய் விட்டு சிரிக்கவும். வாலியின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது...

"சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதிபலம்.
சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு
ஏதுபலம்.
உள்ளம் என்றும் கவலைகள் சேரும் குப்பை தொட்டி இல்லை.
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் வாழ்கை துன்பமில்லை.
"


[ இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது, அபூர்வ பட்டியல் என்னை நிறைய நெகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆட்படுத்தியது. அதை பகிர்ந்து கொள்கிறேன்... ]

.

.
.

2 comments:

Sakthi said...

சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதிபலம்.
சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏதுபலம்.
உள்ளம் என்றும் கவலைகள் சேரும் குப்பை தொட்டி இல்லை.
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் வாழ்கை துன்பமில்லை. "


who is the writer of this poem?

THIRUMALAI said...

மன்னிக்கவும்! இந்த வரிகள் வைரமுத்து அவர்களின் வெளிச்ச புள்ளிகள்..

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்